background img

The New Stuff

த மாலை நேர ஜெபக்கூட்டம் ஹெர் வாக்னர் என்பவரின் வீட்டில் நடைபெற்றது. அவரது வீட்டிற்கு தான் வருவதை அவர் ஒரு வேளை விரும்பமாட்டார் என்று முல்லர் ஆரம்பத்தில் நினைத்தார். அவரது வீட்டிற்கு சென்றதும் முல்லர் தனது வருகைக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டார். அவருடைய வார்த்தையைக் கேட்டு ஹெர் வாக்னர் புன்னகை புரிந்தார்.
"உங்கள் விருப்பம்போல அடிக்கடி இந்த வீட்டிற்கு வாருங்கள். எங்கள் வீடும், எங்கள் இதயமும் உங்களுக்காக எப்பொழுதும் திறந்திருக்கின்றது. இப்பொழுது நீங்கள் வந்து எங்களுடைய ஜெபத்தில் கலந்து கொள்ளுங்கள்" என்று ஹெர் வாக்னர் முல்லரை அன்புடன் அழைத்தார்.
அவர்கள் ஒரு பாமாலைப் பாடலைப் பாடினார்கள். அதற்கப்பால் ஹெர் கெய்சர் என்பவர் (இந்த தேவ மனிதர் பின் நாட்களில் லண்டன் மிஷனரி சுவிசேஷ சங்கம் சார்பாக ஆப்பிரிக்காவுக்கு மிஷனரியாகச் சென்றவர்) முழங்காலூன்றி கூட்டத்தில் கர்த்தருடைய ஆசீர்வாதம் வேண்டி உள்ளம் உருகி ஜெபித்தார். முல்லர் இதுவரை எவரையும் முழங்காலில் நின்று ஜெபிப்பதை பார்க்காததுடன் அவரும் முழங்காலூன்றி ஜெபித்ததும் கிடையாது.
ஹெர் கெய்சர் வேதாகமத்திலிருந்து ஒரு அதிகாரத்தை வாசித்ததுடன் அச்சிடப்பட்ட ஒரு பிரசங்கத்தையும் வாசித்தார். அந்த நாட்களில் ஜெர்மானிய சட்டப்படி ஒரு குருவானவரை தவிர மற்ற சாதாரண கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை மக்களுக்கு விளங்க காண்பிப்பதோ அல்லது பிரசிங்கிப்பதோ குற்றமாகும். கூட்ட முடிவில் ஒரு ஞானப்பாடல் பாடினதும் ஹெர் வாக்னர் ஜெபித்து கூட்டத்தை முடித்தார். அவர் ஜெபிக்கும்போது முல்லர் தனது மனதுக்குள்ளாக நான் இந்த மனிதரைவிட அதிகமாகப் படித்திருக்கின்றேன் நான் கூட இவரைவிட நன்றாக ஜெபிக்கலாமே என்று நினைத்துக் கொண்டார்.

muller

த மாலை நேர ஜெபக்கூட்டம் ஹெர் வாக்னர் என்பவரின் வீட்டில் நடைபெற்றது. அவரது வீட்டிற்கு தான் வருவதை அவர் ஒரு வேளை விரும்பமாட்டார் என்று முல்லர் ஆரம்பத்தில் நினைத்தார். அவரது வீட்டிற்கு சென்றதும் முல்லர் தனது வருகைக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டார். அவருடைய வார்த்தையைக் கேட்டு ஹெர் வாக்னர் புன்னகை புரிந்தார்.
"உங்கள் விருப்பம்போல அடிக்கடி இந்த வீட்டிற்கு வாருங்கள். எங்கள் வீடும், எங்கள் இதயமும் உங்களுக்காக எப்பொழுதும் திறந்திருக்கின்றது. இப்பொழுது நீங்கள் வந்து எங்களுடைய ஜெபத்தில் கலந்து கொள்ளுங்கள்" என்று ஹெர் வாக்னர் முல்லரை அன்புடன் அழைத்தார்.
அவர்கள் ஒரு பாமாலைப் பாடலைப் பாடினார்கள். அதற்கப்பால் ஹெர் கெய்சர் என்பவர் (இந்த தேவ மனிதர் பின் நாட்களில் லண்டன் மிஷனரி சுவிசேஷ சங்கம் சார்பாக ஆப்பிரிக்காவுக்கு மிஷனரியாகச் சென்றவர்) முழங்காலூன்றி கூட்டத்தில் கர்த்தருடைய ஆசீர்வாதம் வேண்டி உள்ளம் உருகி ஜெபித்தார். முல்லர் இதுவரை எவரையும் முழங்காலில் நின்று ஜெபிப்பதை பார்க்காததுடன் அவரும் முழங்காலூன்றி ஜெபித்ததும் கிடையாது.
ஹெர் கெய்சர் வேதாகமத்திலிருந்து ஒரு அதிகாரத்தை வாசித்ததுடன் அச்சிடப்பட்ட ஒரு பிரசங்கத்தையும் வாசித்தார். அந்த நாட்களில் ஜெர்மானிய சட்டப்படி ஒரு குருவானவரை தவிர மற்ற சாதாரண கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை மக்களுக்கு விளங்க காண்பிப்பதோ அல்லது பிரசிங்கிப்பதோ குற்றமாகும். கூட்ட முடிவில் ஒரு ஞானப்பாடல் பாடினதும் ஹெர் வாக்னர் ஜெபித்து கூட்டத்தை முடித்தார். அவர் ஜெபிக்கும்போது முல்லர் தனது மனதுக்குள்ளாக நான் இந்த மனிதரைவிட அதிகமாகப் படித்திருக்கின்றேன் நான் கூட இவரைவிட நன்றாக ஜெபிக்கலாமே என்று நினைத்துக் கொண்டார்.

 ஜோஸ் என்ற ஒரு மனிதர் தோல்பூருக்கு அருகில் உள்ள மில்கன் என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அவர் அந்த கிராமத்தில் ஒரு குதிரைக்காரர். குதிரைக்காரரைப் போல தான் அவர் உடை உடுத்துவது வழக்கம், அவர் சுமார் 35 வயது மதிக்கதக்க மனிதர், இருந்தாலும் அவருக்கு ஒரு சில உடல்நல குறைவுகள் இருந்தன. கால் வலி மற்றும் முதுகுவலி பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவர் அவரை ஒய்வு எடுக்குமாறு அறிவுரறித்தியிருந்தார், மேலும் அவர் வழக்கமாக அணியும் அந்த ஷீ வை அணிந்தால் முதுகுவலி இன்னும் அதிகரிக்கும் என மருத்துவர் கூறினார். மருத்துவரிடம் சரி என்று சொன்னார் ஆனால் அவருக்கு கழற்ற மனமில்லை ஏனெனில் அவர் மிகவும் விரும்பி அணியும் ஒன்று, தொடர்ந்து அவர் வழக்கம் போலவே அந்த ஷீ-உடனே வெளிய செல்ல தொடங்கினார். முதுகுவலி அதிகரிக்க ஆரம்பித்தது, அந்த கிராமத்து மக்களும் அந்த ஷீவை கழற்றுமாறு கூறினர், ஆனால் கடினமான மனம் படைத்த அந்த மனிதரோ யாருடைய சொல்லையும் கேட்பதாக தெரியவில்லை.

ஒரு நாள் இனிய காலைப்பொழுதில் அவர் வழக்கமாக அணியும் அந்த ஷீவை அணியாமல் சாதரணமாக வீட்டில் அணியும் செருப்பை அணிந்து சென்றார். அவருக்கு ஒரே ஆச்சரியம் வழக்கமாக இருக்கும் கால் வலியும் முதுகு வலியும் அன்று அவருக்கு இல்லாமல் இருந்தது, கீழே குனிந்து தன்னுடைய காலை அவர் கவனித்தபோது தான் மாற்றததிற்கான காரணம் புரிந்தது, அன்று அவர் வழக்கமாக அணியும் ஷீ வை அணியாமல் வீட்டில் அணியும் சாதாரண செருப்பை அணிந்திருந்தார்.


அன்று முதல் அவர் அந்த ஷீ வை தூக்கி எறிந்துவிட்டு சாதாரண செருப்பை அணிய ஆரம்பித்தார் வலியில் இருந்தும் விடுதலை கிடைத்தது.


எனதருமை நண்பர்களே, நாமும் கூட சில நேரங்களில் இந்த மனிதரை போல கடின இருதயம் கொண்டு நம்முடைய பாவங்களையும் வேண்டாத தீய பழக்கங்களையும் தூக்கி எறிய மனமில்லாமல் இருக்கிறோம். நாம் அனேக முறை பல பிரசங்கங்களை கேட்டும், அநேகருடைய அறிவுரைகளை கேட்டும் சரி விட்டுவிடுகிறேன் என்று தீர்மானம் எடுத்திருந்தாலும் அதை விட மனமில்லாமல் தொடர்ந்து அதே செயல்களில் ஈடுபடுகிறோம்.

வேதவசனம் தெளிவாக சொல்கிறது இப்படியாக, நீதி 29:1  "அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில்நாசமடைவான்". 

எனவே நம்மிடம் இருக்கும் வேண்டாத எல்லா தீய காரியங்களையும் தூக்கி எறிவோம், அப்பொழுது உங்கள் வாழ்கை புதியதாக மாறியிருப்பதை உணர்வீர்கள்.


















jose

 ஜோஸ் என்ற ஒரு மனிதர் தோல்பூருக்கு அருகில் உள்ள மில்கன் என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அவர் அந்த கிராமத்தில் ஒரு குதிரைக்காரர். குதிரைக்காரரைப் போல தான் அவர் உடை உடுத்துவது வழக்கம், அவர் சுமார் 35 வயது மதிக்கதக்க மனிதர், இருந்தாலும் அவருக்கு ஒரு சில உடல்நல குறைவுகள் இருந்தன. கால் வலி மற்றும் முதுகுவலி பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவர் அவரை ஒய்வு எடுக்குமாறு அறிவுரறித்தியிருந்தார், மேலும் அவர் வழக்கமாக அணியும் அந்த ஷீ வை அணிந்தால் முதுகுவலி இன்னும் அதிகரிக்கும் என மருத்துவர் கூறினார். மருத்துவரிடம் சரி என்று சொன்னார் ஆனால் அவருக்கு கழற்ற மனமில்லை ஏனெனில் அவர் மிகவும் விரும்பி அணியும் ஒன்று, தொடர்ந்து அவர் வழக்கம் போலவே அந்த ஷீ-உடனே வெளிய செல்ல தொடங்கினார். முதுகுவலி அதிகரிக்க ஆரம்பித்தது, அந்த கிராமத்து மக்களும் அந்த ஷீவை கழற்றுமாறு கூறினர், ஆனால் கடினமான மனம் படைத்த அந்த மனிதரோ யாருடைய சொல்லையும் கேட்பதாக தெரியவில்லை.

ஒரு நாள் இனிய காலைப்பொழுதில் அவர் வழக்கமாக அணியும் அந்த ஷீவை அணியாமல் சாதரணமாக வீட்டில் அணியும் செருப்பை அணிந்து சென்றார். அவருக்கு ஒரே ஆச்சரியம் வழக்கமாக இருக்கும் கால் வலியும் முதுகு வலியும் அன்று அவருக்கு இல்லாமல் இருந்தது, கீழே குனிந்து தன்னுடைய காலை அவர் கவனித்தபோது தான் மாற்றததிற்கான காரணம் புரிந்தது, அன்று அவர் வழக்கமாக அணியும் ஷீ வை அணியாமல் வீட்டில் அணியும் சாதாரண செருப்பை அணிந்திருந்தார்.


அன்று முதல் அவர் அந்த ஷீ வை தூக்கி எறிந்துவிட்டு சாதாரண செருப்பை அணிய ஆரம்பித்தார் வலியில் இருந்தும் விடுதலை கிடைத்தது.


எனதருமை நண்பர்களே, நாமும் கூட சில நேரங்களில் இந்த மனிதரை போல கடின இருதயம் கொண்டு நம்முடைய பாவங்களையும் வேண்டாத தீய பழக்கங்களையும் தூக்கி எறிய மனமில்லாமல் இருக்கிறோம். நாம் அனேக முறை பல பிரசங்கங்களை கேட்டும், அநேகருடைய அறிவுரைகளை கேட்டும் சரி விட்டுவிடுகிறேன் என்று தீர்மானம் எடுத்திருந்தாலும் அதை விட மனமில்லாமல் தொடர்ந்து அதே செயல்களில் ஈடுபடுகிறோம்.

வேதவசனம் தெளிவாக சொல்கிறது இப்படியாக, நீதி 29:1  "அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில்நாசமடைவான்". 

எனவே நம்மிடம் இருக்கும் வேண்டாத எல்லா தீய காரியங்களையும் தூக்கி எறிவோம், அப்பொழுது உங்கள் வாழ்கை புதியதாக மாறியிருப்பதை உணர்வீர்கள்.



















Popular Posts